இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களாகிய நூஹ் (நபி) உடைய சமுதாயம், ஆது சமுதாயம், ஸமூது சமுதாயம், இப்ராஹீம் (நபி) உடைய சமுதாயம், மத்யன் வாசிகள், தலைகீழாகப் புரட்டப்பட்ட ஊர்(வாசி)கள் ஆகியோரின் சரித்திரம் அவர்களுக்கு வரவில்லையா? அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள். ஆக, அல்லாஹ் அவர்களுக்கு அநீதியிழைப்பவனாக இருக்கவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்குத் தாமே அநீதி செய்பவர்களாக இருந்தனர்.