ஆக, அவர்கள் தங்கள் உடன்படிக்கையை முறித்ததாலும்; அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகரித்ததாலும்; நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்ததாலும்; “எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டுள்ளன” என்று அவர்கள் கூறியதாலும் (நாம் அவர்களைச் சபித்தோம்). மாறாக, அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அவற்றின் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். ஆகவே, (அவர்களில்) சிலரைத் தவிர, நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.