இன்னும், வேதக்காரர்களில் அல்லாஹ்விற்கு பணிந்தவர்களாக அல்லாஹ்வையும் உங்களுக்கு இறக்கப்பட்டதையும், அவர்களுக்கு இறக்கப்பட்டதையும் நம்பிக்கை கொள்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள், அல்லாஹ்வுடைய வசனங்களுக்குப் பகரமாக சொற்ப கிரயத்தை வாங்க மாட்டார்கள். (வேத வசனங்களை மாற்றி காசுக்காக தவறான சட்டங்களை கூற மாட்டார்கள்.) அவர்கள், அவர்களுடைய கூலி அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. நிச்சயமாக அல்லாஹ் (அடியார்களின் செயல்களை) கணக்கெடு(த்து தகுந்த கூலி கொடு)ப்பதில் மிக விரைவானவன்.