(அந்த வாலிபர் மூஸாவை நோக்கி) அந்த கற்பாறை அருகில் நாம் (ஓய்வுக்காக) ஒதுங்கி (அங்கு தங்கி)ய போது (நடந்த அதிசயத்தை) நீர் பார்த்தீரா? ஆக, நிச்சயமாக நான் (அப்போது அந்த) மீனை(ப் பற்றிக் கூற) மறந்தேன். மேலும், அதைப் பற்றி நான் கூறுவதை எனக்கு மறக்கடிக்கவில்லை, ஷைத்தானைத் தவிர. இன்னும், (அவ்விடத்தில்) கடலில் (செல்ல) ஆச்சரியமான விதத்தில் அது தன் வழியை ஆக்கிக் கொண்டது” என்று கூறினார்.